இஸ்லாத்தின் எதிரிகளது கனவுகள்


                                                    தொடர்...(1)

------------------------------------------
 
இந்தப் பூமிப் பந்தை விட்டே இஸ்லாத்தைத் துடைத்து எறிந்து விடலாம் என்பது இஸ்லாத்தின் எதிரிகளது கனவாக இருந்து வருகின்றது. ஆனால் இவர்களது இந்தக் கனவு நிறைவேறாத ஒன்று என்பதை அவர்கள் அறிந்தே வைத்திருக்கின்றார்கள். எனவே, அவர்கள் இஸ்லாத்துடன் இணைந்து வாழ்வது தங்களால் சாத்தியமற்றது என்று கருதிக் கொண்டவர்களாக, சில சடங்கு சம்பிரதாயங்களுடன் பவனி வரும் கிறிஸ்தவத்தினைப் போல இஸ்லாமியர்களும் வாழ வேண்டும் என்று விரும்புகின்றார்கள். இன்னும் இஸ்லாமிய எதிரிகள் இஸ்லாம் இன்னதென்று வரையறை செய்து தருவதை, அதனை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் விரும்புகின்றார்கள். இந்த வகையில் கடந்த மூன்று நூற்றாண்டுகளாக கடுமையாக அவர்கள் உழைத்ததன் விளைவு, இதில் அவர்கள் பல வெற்றிகளையும் பெற்றுள்ளார்கள். அந்த மூன்று நூற்றாண்டின் இடையறாத அவர்களின் உழைப்பின் காரணமாக போலியான இஸ்லாமிய அங்கத்தவர்களையும், புதிய பிரிவுகளையும், புதிய கொள்கைகள் மற்றும் இஸ்லாத்திற்குள்ளேயே கருத்துமுரண்பாடுள்ள அம்சங்களை ஏற்படுத்துதல் போன்றவற்றை உருவாக்கி விடுவதில் அவர்கள் வெற்றி பெற்றே இருக்கின்றார்கள் என்றே கூற வேண்டும்.

உலகெங்கும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற முஸ்லிம்கள் தங்களின் வாழ்வியல் நெறிகளாகக் கடைபிடிக்கும் குர்ஆன் மற்றும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறைகள் ஆகியவற்றை விட்டும், முஸ்லிம்களை பாராமுகமாக்கி விட வேண்டும் என்று அவர்கள் ரகசியமான முறையில் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருப்பது ஒன்றும் ரகசியமானதொன்றல்ல. கிறிஸ்தவத்தில் உள்ள மத வழிபாட்டு முறைகளைப் போன்று இஸ்லாத்திலும் இருக்குமென்று சொன்னால், அத்தகைய இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கின்றார்களே தவிர, உண்மையான இஸ்லாத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.

 

இஸ்லாத்தின் எதிரிகளை மூன்று வகையினராகப் பிரிக்கலாம்.

(1) மதச்சார்பற்ற அடிப்படைவாதிகள்,

(2) யூத மற்றும் இந்து மத அடிப்படைவாதிகள், மற்றும்

(3) கிறிஸ்தவ அடிப்படைவாதிகள்.

இந்த மூன்று அணியினரும் இணைந்தும், ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவிக் கொண்டும், அவரவர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் இருந்து அதற்கான பணிகளை ஒருங்கிணைத்துக் கொண்டும் செயல்பட்டு வருகின்றார்கள். இவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்தால் அமெரிக்க ஜனத்தொகையில் 4 சதவிகிதத்தினராகவும் அல்லது 10 மில்லியனுக்கும் குறைவான தொகையைக் கொண்டவர்களாகவுமே இருப்பார்கள். இருப்பினும், இந்த சிறு தொகையினரிடம் எல்லையில்லாத அதிகாரங்களும் மற்றும் மக்களை வசீகரிக்கும் தன்மையும் கூட உண்டு. இவர்களைத் தவிர்த்து ஏனைய 96 சதவீதத்தினர் கண்மூடிக் கொண்டு பின்பற்றும் அறியாமைச் சமூகமாகவும் இன்னும் இந்த இஸ்லாத்தின் எதிரிகள் சொல்வதை நம்பக் கூடியவர்களாகவும் இருக்கின்றார்கள். இஸ்லாத்தின் எதிரிகளுக்கும் மற்றும் அவர்களைக் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றிக் கொண்டிருக்கும் மக்களையும் எவ்வாறு பிரிக்க முடியுமென்று சொன்னால், இடையறாத அறிவூட்டும் நடவடிக்கையின் மூலமாக, பிரச்சாரப் பணிகளின் மூலமாக முஸ்லிம்களால் சாதிக்க முடியும்.

இஸ்லாத்தின் எதிரிகள் தங்களை உயர் தகுதிமிக்க அறிவாளிகளாக அதாவது, மருத்துவர், பேராசிரியர், ரெவரெண்ட், ஆய்வாளர் இன்னும் இது போன்ற பட்டங்களை முன்னிறுத்திக் கொண்டு தங்களை சமூகத்திற்கு அறிமுகப்படுத்திக் கொள்ளக் கூடியவராக இருக்கின்றார்கள். இன்னும் இவர்களது கருத்துக்களுக்கு இன்றைய ஊடகங்கள் அதிமுக்கியத்துவத்தையும் வழங்குவதோடு, இவர்களது கல்வித் தகுதி மற்றும் பின்னணி ஆகியவை அவர்கள் சொல்ல வருகின்ற கருத்துக்களுக்கு வலுச்சேர்ப்பனவாகவும் உள்ளது. இதற்கு சில எடுத்துக்காட்டுக்களை நாம் இங்கு முன் வைக்கலாம், டாக்டர் ராபர்ட் மோரே, டாக்டர் அனிஸ் ஷார்ரோஷ், ரெவெரெண்ட் பாட் ராபர்ட்ஸன், ரெவரெண்ட் பில்லி கிரஹாம், பேராசிரியர் ஸாம் ஹண்டிங்டன், பேராசிரியர். டேனியல் பைப்ஸ் மற்றும் பலர்.

மதச்சார்பற்ற அடிப்படைவாதிகளைப் பொறுத்தவரை தங்களை சமூகத்தில் அறிவாளிகளாக இனங்காட்டிக் கொண்டிருப்பவர்கள், இவர்கள் மதம் என்பது மக்களின் வாழ்க்கைக்கு ஒத்துவராத ஒன்று என்று கருதும் அதேவேளையில், மக்கள் தனிப்பட்ட முறையில் கடவுள் அல்லது பல கடவுகள்களின் மீது மத நம்பிக்கை கொள்வதனைச் சகித்துக் கொள்ளக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். இவர்களில் சிலர் பலவீனமான கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக ஒரு கடவுளையோ அல்லது பல கடவுள்களையோ வணங்கக் கூடியவர்களாக இருக்கின்ற அதேவேளையில், தங்களது நம்பிக்கைக்கும் சமூக, பொருளாதார மற்றும் அரசயில் வாழ்க்கைக்கும் தாங்கள் ஏற்று நம்பிக்கை கொண்டிருக்கின்ற கடவுள் கொள்கைக்கும் ஏதேனும் தொடர்பிருக்கின்றதா என்பதைக் கவனிப்பதில்லை, இவர்களில் அந்த மதங்களின் குருமார்களாகத் திகழக் கூடியவர்களும் அடங்குகின்றார்கள். இத்தகையவர்கள் குறிப்பாக இஸ்லாத்திற்கு எதிரிடையாக இருக்கின்றார்கள், ஏனெனில், இஸ்லாம் என்பது ஒரு கொள்கையுடன் பிணைக்கப்பட்ட சமூகச் சூழலை உருவாக்க விளைவதோடு, இதன் காரணமாக மதச்சார்ப்பற்ற கொள்கையுடன் போட்டி போடக் கூடியதாகவும் இருக்கின்றது. இயற்கையாகவே, இந்த மதச்சார்பற்ற கொள்கையுடையவர்களின் நோக்கமே இஸ்லாத்தினை முற்றாக அழித்து விட வேண்டும் என்பதேயாகும், இதற்கான தெளிவாக திட்டமும் அவர்களிடம் உண்டு. மேலே நாம் சுட்டிக் காட்டியுள்ள மூன்று வகையினரில் இந்த மதச்சார்பற்ற அடிப்படைவாதிகளே எண்ணிக்கையில் அதிகம் இருப்பதோடு, மிகவும் பலம் வாய்ந்தவர்களாகவும் இருக்கின்றார்கள். ஏனெனில், இந்தக் குழுவினரில் அரசியல்வாதிகள், பத்திரிக்கையாளர்கள், வியாபாரிகள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மேலைநாட்டுப் பொதுமக்களின் பெரும் பகுதியினர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். இவர்கள் தான் அரசாங்கச் சக்கரத்தை இயக்கக் கூடியவர்களாகவும், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் துணை அமைப்புகளை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பவர்களாகவம், வங்கிகள், சர்வதேச வணிகத் தளங்கள், அறிவாளிகளின் குழுமங்கள், பல்கலைக்கழகங்கள், பள்ளிக்கூட நிர்வாகங்கள், நிதிநிறுவன அமைப்புகள், நன்கொடை அமைப்புகள் என்று எங்கினும் அவர்கள் நிறைந்து காணப்படுகின்றார்கள். இவர்கள் தான் இஸ்லாத்தினை எதிர்க்கக் கூடிய இயக்கங்களை இயக்கக் கூடிய தலைமைகள் ஆவார்கள். இத்தகைய தீவிரவாதிகளையும், ஏமாற்றுப் பேர்வழிகளையும் நாம் பேராசிரியர்களாகவும், துறைசார் நிபுணர்களாகவும், குருமார்களாகவும், கல்வியாளர்களாகவும் மற்றும் அறிவுசார்நிபுணர்களாகவும் இருக்கக் காணலாம்.

ஒன்றை மனதில் கொள்ள வேண்டும். அனைத்து மதச்சார்ப்பற்ற அரசியல்வாதிகளும் இஸ்லாத்தின் எதிரிகளல்ல. மாறாக, அவர்களில் பெரும்பகுதியினர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இஸ்லாத்தின் எதிரிகளாக இருக்கின்றார்கள் என்பதே உண்மையாகும். இந்த எதிரிகள் ஆராய்ச்சிகளின் மூலமாகவும், கல்வித்துறை சார்ந்த வகையிலும், வெளியீடுகள் மூலமாகவும், புத்தகங்கள், பத்திரிக்கைகளில் பத்திரிக்கைத் துறைசார் நிபுணர்களைக் கொண்டும் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களைப் பரப்பக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். இவ்வாறாக, அவர்கள் சமூகத்தில் வாழக் கூடிய மக்களின் மூளைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்களாக இருக்கின்றார்கள்.

0 comments:

Post a Comment