அந் நாஸ் (மனிதர்கள்)

அந் நாஸ் (மனிதர்கள்) மக்காவில் அருளப்பட்டது


அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகின்றேன்)


114:1-6 கூறுவீராக! மக்களின் அதிபதியிடம் - மக்களின் மன்னனிடம் - மக்களின் உண்மையான இறைவனிடம் நான் பாதுகாப்பு தேடுகின்றேன்: திரும்பத்திரும்ப வந்து ஊசலாட்டங்களை ஏற்படுத்துபவனின் தீங்கிலிருந்து.1 அவன் எத்தகையவன் எனில், மனிதர்களின் உள்ளங்களில் ஊசலாட்டங்களை ஏற்படுத்துகின்றான். அவன் ஜின் இனத்தைச் சேர்ந்தவனாயினும் மனித இனத்தைச் சேர்ந்தவனாயினும் சரியே!2


1. அதாவது, ஒருமுறை மனித உள்ளத்தில் ஊசலாட்டத்தை விதைத்து வழிதவறச் செய்யும் முயற்சியில் வெற்றி பெறவில்லை எனில் அவன் நழுவிவிடுகின்றான். பின்னர், மீண்டும் திரும்ப வந்து ஊசலாட்டத்தை ஏற்படுத்த முனைகின்றான். தொடர்ந்து இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டே இருக்கின்றான்.

2. அதாவது, இப்படி ஊசலாட்டத்தை ஏற்படுத்தவோர் மனிதர்களாயினும் சரி, ஜின்களாயினும் (ஷைத்தான்களாயினும்) சரி: இவ்விரு பிரிவினரின் தீங்கைவிட்டு பாதுகாவல் தேடுகின்றேன்.

0 comments:

Post a Comment