ஸஹீஹ_ல் புஹாரியிலிருந்து…

அத்தியாயம் - 3 - கல்வி


அல்லாஹ் கூறினான்

’’உங்களில் இறைநம்பிக்கையாளர்களுக்கும், கல்வி கொடுக்கப்பட்டவர்களுக்கும் பலபடித்தரங்களை அல்லாஹ் உயர்த்துகிறான். அல்லாஹ‘; நீங்கள் செய்பவற்றை நன்கு அறிபவன்.’’
(திருக்குர்ஆன் 58:11)

’’என்னுடைய இறைவா! எனக்கு நீ ஞானத்தை திகமாக்குவாயாக!’’ (திருக்குர்ஆன்20:114) என்ற அல்லாஹ்வின் கூற்று.



ஒருவர் தம் பேச்சில் ஈடுபட்டிருககும்போது எவரேனும் கல்வியைப் பற்றிக் கேள்வி

கேட்டால், அவர் தம் பேச்சை முடித்துக் கொண்டு, கேள்வி கேட்பவருக்கு மறுமொழி அளிப்பது.


ஹதீஸ் 59. ’ஓர் அவையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்களுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தபோதுஅவர்களிடம் நாட்டுப் புறத்து அரபி ஒருவர் வந்தார். ’மறுமை நாள் எப்போது?’ எனக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் பேச்சைத் தொடர்ந்து

கொண்டிருந்தார்கள். அப்போது (அங்கிருந்த) மக்களில் சிலர் ’நபி(ஸல்) அவர்கள் அம்மனிதர் கூறியதைச் செவியுற்றார்கள் எனினும் அவரின் இந்தக் கேள்வியை அவர்கள் விரும்பவில்லை’ என்றனர். வேறு சிலர், ’அவர்கள் அம்மனிதர் கூறியதைச் செவியுறவில்லை’ என்றனர். முடிவாக நபி(ஸல்) அவர்கள் தங்களின் பேச்சை முடித்துக் கொண்டு, ’மறுமை நாளைப் பற்றி (என்னிடம்) கேட்டவர் எங்கே?’ என்று கேட்டார்கள். உடனே (கேட்டவர்)’ இறைத்தூதர் அவர்களே! இதோ நானே’ என்றார். அப்போது கூறினார்கள்.’ அமானிதம் பாழ்படுத்தப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர் பார்க்கலாம்.’’ அதற்கவர், ’அது எவ்வாறு பாழ் படுத்தப்படும்?’ எனக் கேட்டதற்கு, ’எந்தக் காரியமாயினும் அது, தகுதியற்றவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர்பாரும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’’ என அப+ ‘{ரைரா(ரலி) அறிவித்தார்.


கல்வியை உரத்த குரலில் போதிப்பது.


ஹதீஸ் 60. ’நாங்கள் மேற்கொண்ட பயணம் ஒன்றில் நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குப் பின்னே வந்து கொண்டிருந்தார்கள். தொழுகையின் நேரம் எங்களை நெருங்கிவிட்ட நிலையில் நாங்கள் உ@ச் செய்து கொண்டிருந்தபோது நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து சேர்ந்தார்கள். அப்போது நாங்கள் எங்கள் கால்களைத் தண்¡ரால் தடவிக் கொண்டிருந்தோம். (அதைக்கண்டதும்) ’குதிங்கால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்கு நரகம் தான்!’ என்று இரண்டு அல்லது மூன்று முறை தம் குரலை உயர்த்தி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’’ என அப்துல்லா‘; இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்

0 comments:

Post a Comment